விவசாயிகளுக்கு விரைவு மின் இணைப்பு வழங்கல் திட்டம்


விவசாயிகளுக்கு விரைவு மின் இணைப்பு வழங்கல் திட்டம்
x
தினத்தந்தி 22 Aug 2023 7:00 PM GMT (Updated: 22 Aug 2023 7:00 PM GMT)

கடையநல்லூர் பகுதியில் விவசாயிகளுக்கு விரைவு மின் இணைப்பு வழங்கல் திட்டம் உள்ளது.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ஆதிலெட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் ஆணையின்படி விவசாய மின் இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலில் உள் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விவசாய மின் இணைப்பு பெறும் வகையில் விரைவு (தட்கல்) மின் இணைப்பு வழங்கல் திட்டம் 2017 முதல் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் நடைமுறை படுத்தப்பட்டு விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே தட்கல் முறையில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கும் மற்றும் தற்பொழுது தட்கல் முறையில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும்.

எனவே தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் ஏற்கனவே விவசாய மின் இணைப்பு கோரி பதிவு செய்துள்ள விருப்பமுள்ள விவசாயிகள், இந்த தட்கல் சிறப்பு திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு பெற தங்கள் பகுதி செயற்பொறியாளர், இயக்குதல் மற்றும் பராமரித்தல் அலுவலர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story