உதவித்தொகை பெற கிராம நிர்வாக அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் தகவல்


உதவித்தொகை பெற கிராம நிர்வாக அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் தகவல்
x

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு உதவித்தொகை பெற கிராம நிர்வாக அலுவலகங்களில் இன்று விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தகவல் தெரிவித்து உள்ளார்.

தென்காசி

தென்காசி:

தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தென்காசி மாவட்டத்தில் தாலுகா வாரியாக அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களிலும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, முதிர்கன்னி உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் உழவர் பாதுகாப்புதிட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை மற்றும் இயற்கை மரணம், விபத்து மரண உதவித்தொகை பெறுவதற்குரிய சிறப்பு முகாம் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது.

இந்த முகாமில் நலத்திட்ட உதவித்தொகை பெற விரும்பும் பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்து பயன்பெற கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



Next Story