நோயாளிகளுக்கு உதவித்தொகை


நோயாளிகளுக்கு உதவித்தொகை
x
தினத்தந்தி 11 April 2023 7:00 PM GMT (Updated: 11 April 2023 7:01 PM GMT)

கொடைக்கானலில் இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் நோயாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.

திண்டுக்கல்

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் கொடைக்கானல் கிளை சார்பில், புற்றுநோய் மற்றும் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட 2 பேருக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. விழாவுக்கு செஞ்சிலுவை சங்க கிளை தலைவரும், முன்னாள் நகராட்சி தலைவருமான டாக்டர் கே.சி.ஏ.குரியன் ஆபிரகாம் தலைமை தாங்கினார். சங்கத்தின் துணைத்தலைவர்கள் சாம்ஆபிரகாம், சலாமத், தாவூத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சூசை ஜான் ஆண்டறிக்கை வாசித்தார்.

விழாவில் கொடைக்கானல் நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நோயாளிகளுக்கு உதவித்தொகையை வழங்கி பேசினர். முன்னாள் நகராட்சி தலைவர் ஸ்ரீதர், டாக்டர்கள் மார்கன், மதன்கோவிந்தன், பள்ளிவாசல் இமாம் ஷேக்அப்துல்லா, நகராட்சி கவுன்சிலர்கள், செஞ்சிலுவை சங்க கிளை நிர்வாகிகள், சீயோன் மெட்ரிக் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நிர்வாகி அப்பாஸ் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story