மாணவர்களுக்கு உதவித்தொகை


மாணவர்களுக்கு உதவித்தொகை
x
தினத்தந்தி 17 July 2023 6:45 PM GMT (Updated: 17 July 2023 6:45 PM GMT)

சாயல்குடியில் எஸ்.டி.பி.ஐ.கட்சி சார்பில் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.

ராமநாதபுரம்

சாயல்குடி,

ராமநாதபுரம் மேற்கு மாவட்டம் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் சாயல்குடியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் மற்றும் எஸ்.டி.பி.ஐ.கட்சி 15-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர் பாஞ்சு பீர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் காஜா முகைதீன் வரவேற்றார்.. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜா முஹம்மது நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார். மாவட்ட தலைவர் நூருல் அமீன் தொடக்க உரை ஆற்றினார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் முகம்மது முஸ்தபா, விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட தலைவர் கன்சூல்மஹரிபா, ஆதித்தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

ராமநாதபுரம் மேற்கு மாவட்ட துணைத்தலைவர் மவுலி மீரான் முகைதீன் மன்பா, முதுகுளத்தூர் தொகுதி தலைவர் ரஷித் கான், மாநில பொதுக்குழு உறுப்பினர் முஹம்மது ஆரிப், சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன், நரிப்பையூர் ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன், சாயல்குடி வர்த்தக சங்க தலைவர் அபுபக்கர், அ.தி.மு.க. பிரதிநிதி செய்யது காதர், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி லாரன்ஸ், நரிப்பையூர் ஜமாத் தலைவர் முகம்மது ஆசாத், செயலாளர் அப்துல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக், பனைத்தொழிலாளர் நலச் சங்க மாநில தலைவர் சதாசிவம் அண்ணாச்சி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார். விழாவில் மாவட்ட நிர்வாகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு உயர் கல்வி படிப்பதற்கான உதவித்தொகை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ஹமீது சுல்தான், பரமக்குடி தொகுதி தலைவர் மஹாதீர் முகம்மது, முதுகுளத்தூர் தொகுதி செயலாளர் செய்யது பாரூக், கடலாடி ஒன்றிய தலைவர் நூர் முகம்மது, ஒன்றிய செயலாளர் ஹக்கீம், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முடிவில் மாவட்ட தொண்டரணி தலைவர் பஹிம் முகம்மது நன்றி கூறினார்.


Related Tags :
Next Story