பள்ளி, கல்லூரி மாணவர்கள் செஸ் போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

தூத்துக்குடியில் நடந்த பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ பரிசு வழங்கி பாராட்டினார்
தூத்துக்குடியில் நடந்த பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ பரிசு வழங்கி பாராட்டினார்.
செஸ் போட்டி
சென்னையில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு செஸ் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி தூத்துக்குடி காமராஜ் பெண்கள் கல்லூரியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான செஸ் போட்டிகள் நேற்று காலை நடந்தன.
பரிசு
இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ தலைமை தாங்கி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழக செயலாளர் கற்பகவள்ளி, மாவட்ட விளையாட்டு அலுவலர் (பொறுப்பு) ராஜரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






