பள்ளி ஆண்டு விழா


பள்ளி ஆண்டு விழா
x

தெற்கு வள்ளியூர் நிர்மலா ஆர்.சி. நடுநிலைப்பள்ளி ஆண்டுவிழா நடந்தது.

திருநெல்வேலி

வள்ளியூர் (தெற்கு):

தெற்கு வள்ளியூர் நிர்மலா ஆர்.சி. நடுநிலைப்பள்ளி ஆண்டுவிழா நடைபெற்றது. விழாவுக்கு டி.டி.என். கல்வி குழுமத்தின் தலைவரும், பள்ளியின் புரவலருமான டி.டி.என்.லாரன்ஸ் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளரும், வள்ளியூர் புனித பாத்திமா அன்னை திருத்தல பங்குதந்தையுமான ஆர்.ஜேசுதுரை ஜாண்சன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை ஆரோக்கிய மேரி ஆண்டறிக்கை வாசித்தார்.

சிறப்பு விருந்தினர்களாக கலந்தபனை அமைதி இல்லம் இயக்குனர் ரெக்ஸ், வள்ளியூர் பாத்திமா அன்னை ஆலய உதவி பங்குதந்தை, புனித பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கிறிஸ்டிசலேத் ஜெயந்தி, திருச்சிலுவை நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை அக்ஸிலியா, தெற்கு வள்ளியூர் ஊராட்சி மன்ற தலைவி முத்தரசி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவி பிரேமா ஆகியோர் பங்கேற்று பேசினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டி.லாரன்ஸ் பரிசு வழங்கி பாராட்டினார். ஆசிரியை அமலா வரவேற்றார். ஆசிரியை பிரபா நன்றி கூறினார்.


Next Story