பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x

ஆம்பூர் அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திருப்பத்தூர்

ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் ஊராட்சி ராமச்சந்திராபுரம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர், கூலித்தொழிலாளி. இவரது மகள் சங்கவி (வயது 17). இவர் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் உள்ள அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உமராபாத் போலீசார் சங்கவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story