குட்டையில் மூழ்கி பள்ளி மாணவி பலி


குட்டையில் மூழ்கி பள்ளி மாணவி பலி
x

கலவை புத்தூரில் குட்டையில் மூழ்கி பள்ளி மாணவி பலியானார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை வாழைப்பந்தல் சாலை பகுதியை சேர்ந்தவர் சரவணன், கூலித் தொழிலாளி. இவரது 2-வது மகள் நந்தினி (வயது 13). பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை கலவை புத்தூர் குட்டை அருகே மேய்ச்சலுக்காக கட்டப்பட்டிருந்த மாட்டின் கயிறை எடுத்து வருவதற்காக நந்தினி சென்றபோது எதிர்பாராத விதமாக கால் தவறி குட்டையில் விழுந்ததாக தெரிகிறது. நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு வரராததால் பெற்றோர் தேடிசென்றனர். அப்போது, ஏரி கோடியில் உள்ள தரைப்பாலம் அருகே மாணவியின் ஒரு செருப்பு மட்டும் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த சரவணன் குட்டையில் இறங்கி தேடிய போது மாணவி சேற்றில் சிக்கியிருந்தது தெரிய வந்தது. அவரை மீட்டு கலவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே இறந்து விட்டார்.

இதுகுறித்து சப்- இன்ஸ்பெக்டர் சூர்யா, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் காந்தி மற்றும் போலீசார் சென்று உடலை பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சப்- இன்ஸ்பெக்டர் சூர்யா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.


Next Story