பள்ளி மாணவி மாயம்


பள்ளி மாணவி மாயம்
x

பள்ளி மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெரம்பலூர்

பெரம்பலூர் பெரிய தெற்கு தெருவை சேர்ந்தவர் அங்கப்ப சரவணன். இவரது மகள் மனோ வர்ஷினி (வயது 14). இவர் பெரம்பலூர் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மாதம் 29-ந்தேதி பள்ளி அருகே உள்ள ஒரு புத்தக நிலையத்தில் இருந்து வெளியே சென்ற மனோ வர்ஷினி அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அங்கப்ப சரவணன் அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பள்ளி மாணவியை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story