பள்ளி மாணவி மாயம்


பள்ளி மாணவி மாயம்
x

பள்ளி மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூர்

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி அருகே உள்ள எய்யலூர் கிராமத்தை சேர்ந்தவர் கந்தவேல். இவரது மகள் சுகந்தி(வயது 16). இவர் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் உள்ள தனது பெரியம்மா வீட்டில் தங்கி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் காலை கடைவீதிக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கந்தவேல் தனது மகளை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கந்தவேல் அளித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுகந்தியை தேடி வருகின்றனர்.


Next Story