விஷம் குடித்து பள்ளி மாணவன் சாவு


விஷம் குடித்து பள்ளி மாணவன் சாவு
x

விஷம் குடித்து பள்ளி மாணவன் இறந்தார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை,

விஷம் குடித்து பள்ளி மாணவன் இறந்தார்.

நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர் சுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் சந்திரன் (வயது 15), பச்சூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சந்திரன் கடந்த 6 மாதமாக தீராத தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.கடந்த 5 தினங்களுக்கு முன் சந்திரன் விஷத்தை குடித்து விட்டார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கும் உடல்நிலை மோசமானதால் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேேய சந்திரன் இறந்து விட்டார். இது சம்பந்தமாக உறவினர் சென்னகேசவன் கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story