பள்ளி மாணவி மாயம்


பள்ளி மாணவி மாயம்
x

மாயமான பள்ளி மாணவி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூர்

தா.பழூர்

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகில் உள்ள இடங்கண்ணி அண்ணா சிலை தெருவில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன் மனைவி சுதா(43). இவருக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். சுதாவின் 2-வது மகள் ஜனனி(17) தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 23-ந் தேதி பொதுத்தேர்வு முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். இரவு அனைவரும் தூங்கிக்கொண்டு இருந்தபோது அதிகாலை 2 மணியளவில் திடீரென விழிப்பு வந்து பார்த்தபோது தன் அருகில் படுத்திருந்த ஜனனி காணவில்லை என்று கூறப்படுகிறது. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் தா.பழூர் போலீஸ் நிலையத்தில் சுதா அளித்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


Next Story