6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு


6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு
x

6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.

பெரம்பலூர்

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கடந்த மாதம் அரையாண்டு தேர்வு நடந்தது. கடந்த 23-ந் தேதியுடன் அரையாண்டு தேர்வு முடிவடைந்து 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு 12 நாட்களும், 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு 9 நாட்களும் விடுமுறை விடப்பட்டிருந்தது. அதன்படி அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து நேற்று தமிழகம் முழுவதும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது.

அதன்படி பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து நேற்று காலை மாணவ-மாணவிகள் பள்ளிக்கு சென்றனர். பள்ளிகளில் திருத்தப்பட்ட அரையாண்டு தேர்வு விடைத்தாள்களை மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் வழங்கினர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6, 7-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 3-ம் பருவக்கால விலையில்லா பாடப்புத்தக்கங்களும், பாட குறிப்பேடுகளும் வழங்கப்பட்டன. 8, 9-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாட குறிப்பேடுகள் வழங்கப்பட்டது.


Next Story