மரத்தில் ஸ்கூட்டர் மோதல்; பள்ளி மாணவி பலி


மரத்தில் ஸ்கூட்டர் மோதல்; பள்ளி மாணவி பலி
x

மரத்தில் ஸ்கூட்டர் மோதல்; பள்ளி மாணவி பலியானார்.

புதுக்கோட்டை

அன்னவாசல்:

அன்னவாசல் அருகே மேட்டு தெருவை சேர்ந்தவர் பன்னீர். இவரது மகள் லாவண்யா (வயது 17). அதே பகுதியை சேர்ந்த மணி மகள் கோபிகா (17). இவர்கள் இருவரும் அன்னவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட இருவரும், விழா முடிந்த பின்னர் ஸ்கூட்டரில் புதுக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தனர். ஸ்கூட்டரை கோபிகா ஓட்டியதாக கூறப்படுகிறது. சித்தன்னவாசல் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையோர புளியமரத்தில் ஸ்கூட்டர் மோதியது. இதில் மாணவிகள் இருவரும் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்தனர். இதையறிந்த அன்னவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவிகள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி லாவண்யா இன்று பரிதாபமாக பலியானார். அரசு பள்ளி மாணவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story