கள்ளத்தொடர்பை துண்டித்ததால் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு


கள்ளத்தொடர்பை துண்டித்ததால் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 17 Feb 2023 6:45 PM GMT (Updated: 17 Feb 2023 6:46 PM GMT)

தேன்கனிக்கோட்டை அருகே கள்ளத்தொடர்பை துண்டித்ததால் பெண்ணை அரிவாளால் வெட்டிய தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை அருகே கள்ளத்தொடர்பை துண்டித்ததால் பெண்ணை அரிவாளால் வெட்டிய தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கள்ளத்தொடர்பு

தேன்கனிக்கோட்டை தாலுகா பெட்ட முகிலாலம் அருகே உள்ள கோட்டையூர் கொள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னமல்லா. இவருடைய மனைவி ருத்ரம்மாள் (வயது 40).. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ருத்ரா (38) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதை அறிந்த சின்னமல்லா, மனைவியை கண்டித்துள்ளார். இதனால் அவர் கள்ளத்தொடர்பை கைவிட முடிவு செய்தார். அதற்காக ருத்ராவிடம் இனிமேல் தன்னிடம் பேசவேண்டாம் என்று கூறி ருத்ரம்மாள் தொடர்பை துண்டித்து விட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ருத்ரா சம்பவத்தன்று ருத்ரம்மாளை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.

வலைவீச்சு

இதில் படுகாயம் அடைந்த ருத்ரம்மாளை உறவினர்கள் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ருத்ராவை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story