2 பேருக்கு அரிவாள் வெட்டு


2 பேருக்கு அரிவாள் வெட்டு
x

பாவூர்சத்திரம் அருகே 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே உள்ள மேலப்பாவூர் வடக்கு தெருவை சேர்ந்த சாமிதுரை மகன் முத்துசாரதி மற்றும் ஜெகநாதன் மகன் சுரேஷ் ஆகியோருக்கும், அதேஊர் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த மாடசாமி மகன் சொள்ளமுத்து, கருப்பசாமி மகன் கனிப்பாண்டி ஆகியோருக்கும் இடையே, முன்பு அந்த ஊரில் நடந்த ஒரு கொலை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சொள்ளமுத்துவும், கனிப்பாண்டியும் சேர்ந்து முத்துசாரதி மற்றும் சுரேசை அரிவாளால் வெட்டினர். இதில் 2 பேரும் காயம் அடைந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சொள்ளமுத்து, கனிப்பாண்டி ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க அந்த ஊரில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.


Next Story