விவசாயிக்கு அரிவாள் வெட்டு


விவசாயிக்கு அரிவாள் வெட்டு
x

விவசாயிக்கு அரிவாள் வெட்டு

தஞ்சாவூர்

பேராவூரணி அருகே உள்ள காலகம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 59). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பழனிவேல் (52) என்பவருக்கும் இடப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. நேற்றுமுன்தினம் சைக்கிளில் வந்த சுப்பிரமணியத்தை வழிமறித்து பழனிவேல் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை அவரது உறவினர்கள் மீட்டு

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பழனிவேல், சுப்பிரமணியன் தனி தனியாக கொடுத்த புகாரின் பேரில் பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


Related Tags :
Next Story