தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு


தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
x

தட்டார்மடம் அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டிய ௨ வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுலோஸ் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பூலையாபுரம் பஸ் நிறுத்தம் பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்ற வாலிபர்கள் 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சாத்தான்குளம் முதலூர் பகுதியை சேர்ந்த லிவிங்ஸ்டன் சாமுவேல் என்ற பட்டு (வயது 25), சாத்தான்குளம் சன்னதி தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகன் ஆண்டன் வின்ஸ்டன் (20) என்பதும், அவர்கள் அந்த பகுதியில் வந்த ஒரு தொழிலாளியை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து அரிவாளால் வெட்டியதும் தெரிய வந்தது.

இதுகுறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 2 வாலிபர்களையும் கைது செய்தனர். இதில் லிவிங்ஸ்டன் சாமுவேல் மீது தட்டார்மடம், நாசரேத், சாத்தான்குளம் ஆகிய போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே 5 வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடித்தக்கது.


Next Story