தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு


தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
x

தூத்துக்குடியில் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

தூத்துக்குடி

தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் சந்திரகுமார். கூலித்தொழிலாளி. இவருக்கும் அண்ணாநகரை சேர்ந்த டிரைவரான வேல்ராஜ் (வயது 27) என்பவருக்கும் அங்குள்ள ஒரு கோவில் திருவிழாவின்போது வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்குள் முன் விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சந்திரகுமார் மதுரை பைபாஸ் ரோட்டில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது வேல்ராஜ் தலைமையில் வந்த ஒரு கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது குறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வேல்ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் 6 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.


Next Story