தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு; வாலிபர் கைது


தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு; வாலிபர் கைது
x

நெல்லையில் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

மேலப்பாளையம் குறிச்சி பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 38). கூலி தொழிலாளி. இவரின் உறவுக்கார பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெருவில் தண்ணீர் பிடித்து கொண்டு இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் சதீஷ்குமார் (27) என்பவர் அவரிடம் தகராறு செய்தாா். இதுகுறித்து குமார் போலீசுக்கு தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் குறிச்சி முப்பிடாதி அம்மன் கோவில் அருகே குமார் நின்றுகொண்டு இருந்தாா். அப்போது அங்கு வந்த சதீஷ்குமார் தகராறு செய்து, குமாரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தனர்.


Next Story