விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு


விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 18 Jan 2023 6:45 PM GMT (Updated: 18 Jan 2023 6:45 PM GMT)

கள்ளக்குறிச்சி அருகே விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு பேனரை சேதப்படுத்தியதை தட்டிக்கேட்டதால் வாலிபர் ஆத்திரம்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே தண்டலை கிராமத்தை சேர்ந்தவர் வேம்பு மகன் மாயவன் (வயது 42). விஜய் ரசிகர் மன்ற துணை தலைவராக உள்ள இவர் அதே கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகில் விஜய் ரசிகர் மன்ற பேனரை வைத்துள்ளார். இதன் மீது அதே பகுதியை சேர்ந்த சிகாமணி மகன் சந்தோஷ்(18) என்பவர் கல்லை எறிந்து சேதப்படுத்தியுள்ளார். இதை மாயவன் தட்டிக்கேட்டபோது ஆத்திரம் அடைந்த சந்தோஷ் தன்னிடம் இருந்த அரிவாளால் மாயவனின் கழுத்து மற்றும் இடது கையில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சோ்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்த புகாரின் பேரில் சந்தோஷ் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story