கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மனைவிக்கு அரிவாள் வெட்டு


கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மனைவிக்கு அரிவாள் வெட்டு
x

பட்டிவீரன்பட்டி அருகே கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மனைவியை அரிவாளாள் வெட்டிய கணவர் கைது.

திண்டுக்கல்

பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சித்தரேவு, வடக்குத்தெருவை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 64). இவரது மனைவி பாக்கியம் (55). பழனிசாமிக்கும், வேறொரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் வீட்டு செலவுக்கு சரிவர பணம் கொடுக்கவில்லை. இந்தநிலையில் கணவரின் கள்ளக் காதல் குறித்து அறிந்த பாக்கியம் நேற்று முன்தினம் பழனிசாமியிடம் தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவர், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மனைவி பாக்கியத்தை சரமாரியாக வெட்டினார்.

இதில் படுகாயம் அடைந்த பாக்கியத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிசாமியை கைது செய்தனர்.


Next Story