85 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்


85 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 20 April 2023 6:45 PM GMT (Updated: 20 April 2023 6:45 PM GMT)

இலங்கைக்கு கடத்த பதுக்கிய 85 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

இலங்கைக்கு கடத்த பதுக்கிய 85 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

85 கிலோ கடல் அட்டைகள்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு துறைமுக கடல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வலையர்வாடி கடல் பகுதியில் 5 பிளாஸ்டிக் கேன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை இந்திய கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர்.

மொத்தம் 85 கிலோ கடல் அட்டைகள் இருந்தன. அவற்றை மண்டபத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணை

இந்த கடல் அட்டைகள் இலங்கைக்கு கடத்த கடற்கரை பகுதியில் பதுக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கடல் அட்டைகளை பதுக்கியவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story