நிலுவை வரி செலுத்தாத கடைகளுக்கு 'சீல்' வைப்பு


நிலுவை வரி செலுத்தாத கடைகளுக்கு சீல் வைப்பு
x

நிலுவை வரி செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் நகராட்சி நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டிய வரிகளை நிலுவை இல்லாமல் செலுத்த அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பல மாதங்களாக வரிகள் செலுத்தாத கடைகளுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், திருக்கோகர்ணம், சந்தைப்பேட்டை பகுதியில் வரி நிலுவை வைத்திருந்த 7 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Next Story