உன்னியூர் காளியம்மன் கோவிலுக்கு `சீல்' வைப்பு


உன்னியூர் காளியம்மன் கோவிலுக்கு `சீல் வைப்பு
x

உன்னியூர் காளியம்மன் கோவிலுக்கு `சீல்' வைக்கப்பட்டது.

திருச்சி

காட்டுப்புத்தூர், ஆக.13-

காட்டுப்புத்தூர் அருகே உன்னியூர் கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தேர் திருவிழா 8 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடைபெற்றது. இந்தநிலையில் இக்கோவில் தேரை தனிநபரின் இடம் வழியாக தூக்கி செல்வோம் என்று கூறி நாகப்ப முதலிபுதூர், மூங்கில் பட்டி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த திருச்சி மாவட்ட கூடுதல் துணை சூப்பிரண்டு பால் வண்ண நாதன், முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு யாஸ்மின் மற்றும் தொட்டியம் தாசில்தார் சத்திய நாராயணன் மற்றும் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியதில் நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படக்கூடாது என எடுத்துரைத்தனர். தாங்கள் சட்டத்தை மதிக்கிறோம் எனக்கூறி உரிய முறைப்படி தேரை சிறிது தூரம் எடுத்துச் சென்று வழிபாடு நடத்தி கோவிலுக்கு கொண்டு செல்கிறோம் என உறுதி அளித்தனர். ஆனால் தனிநபரின் நிலத்தின் வழியாக தேரை கொண்டு செல்ல முயற்சித்து கம்பி வேலிகளை அகற்றினர். இதையடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்படாததால் தேரில் உள்ள உற்சவர் சிலையை மீட்டு கோவிலுக்கு கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன் பேரில் போலீசார் தேரில் இருந்த உற்சவர் சிலையை மீட்டு கோவிலுக்கு வந்தனர். பின்னர் கோவில் கதவை பூட்டி சீல் வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story