ஊட்டியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 6 கட்டிடங்களுக்கு 'சீல்'


ஊட்டியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 6 கட்டிடங்களுக்கு சீல்
x

ஊட்டியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 6 கட்டிடங்களுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

நீலகிரி

ஊட்டி

ஊட்டியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 6 கட்டிடங்களுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

ஆய்வு

நீலகிரி மாவட்டம் மலைப்பகுதியாகவும், அதிக வனப்பகுதிகளை கொண்டதாகவும் உள்ளது. நீலகிரியின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பேரிடர்கள் ஏற்படுவதை கருத்தில் கொண்டும் மாஸ்டர் பிளான் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, வீட்டுக்கு என்று அனுமதி பெற்று தங்கும் விடுதி மற்றும் வணிக கட்டிடங்களாக மாற்றக்கூடாது.

குடியிருப்பு பகுதிகளில் தங்கும் விடுதிகள், வணிக கட்டிடங்கள், ஓட்டல்கள் கட்டக்கூடாது, 7 மீட்டர் உயரத்துக்கு மேல் கட்டிடம் கட்ட அனுமதி இல்லை உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும் இந்த விதிகளை காற்றில் பறக்கவிட்டு சிலர் கட்டிடங்கள் கட்டி வருகின்றனர். இவ்வாறு கட்டப்பட்ட கட்டிடங்களில் முறையாக கணக்கெடுத்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவின் படி, ஊட்டி நகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

6 கட்டிடங்களுக்கு சீல்

இந்த நிலையில் ஊட்டி மைசூர் சாலையில் விதிமுறைகளுக்கு மாறாக 6 கட்டிடங்கள் கட்டி இருப்பது நகராட்சி அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து நகராட்சி திட்டமைப்பு அதிகாரி ஜெயவேல், கட்டிட ஆய்வாளர் மீனாட்சி மற்றும் நகராட்சி பணியாளர்கள் ஆய்வு செய்து விதி மீறிய கட்டிடங்களுக்கு நேற்று சீல் வைத்தனர். இதேபோல் எஸ்.பி.எப். பகுதியில் அனுமதிக்கு மாறாக கட்டப்பட்டிருந்த இரண்டாம் தளம் சீல் வைத்து மூடப்பட்டது. மேலும் திட்ட அனுமதிக்கு மாறாக கட்டப்பட்ட கட்டடங்கள் குறித்து ஆய்வு பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக நகராட்சி ஆணையாளர் காந்திராஜன் தெரிவித்தார்.


Next Story