விபத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் பலி


விபத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் பலி
x

சேலம் இரும்பாலையில் விபத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்

மயங்கி கிடந்தார்

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகன் ஜெயக்குமார் (வயது 38). இவர் கடந்த 2010-ம் ஆண்டு மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் பணியில் சேர்ந்தார். கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு நிறுவனமான சேலம் உருக்காலையில் அவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.

நேற்று முன்தினம் இரவு உருக்காலையில் பாதுகாப்பு பணியில் இருந்தார். பின்னர் பணி முடிந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் அவர் உருக்காலையில் உள்ள ஒரு நுழைவுவாயில் அருகே மயங்கி கிடந்தார்.

விசாரணை

இதை பார்த்த அந்த வழியாக வந்த மற்ற பணியாளர்கள் ஜெயக்குமாரை மீட்டு அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயக்குமார் இறந்தார்.

இதுகுறித்து இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமார் எதிரே வந்த வாகனம் மோதியதில் இறந்தாரா? அல்லது விபத்தில் சிக்கி இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story