அரூரில் கடந்த மாதம் உரிய ஆவணம் இன்றி இயங்கிய 21 வாகனங்கள் பறிமுதல்

அரூர்:
அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன் மற்றும் அலுவலர்கள் கடந்த மாதம் அரூர் பைபாஸ் சாலை, கோபிநாதம்பட்டி கூட்ரோடு, சாமியாபுரம் கூட்ரோடு, மஞ்சவாடி கணவாய் ஆகிய பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன்படி கடந்த மாதம் 21 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் விதிமுறைகளை மீறியதாக 92 வாகனங்களுக்கு ரூ.3 லட்சத்து 66 ஆயிரத்து 250 அபராதமாக விதிக்கப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





