புகையிலை பொருட்கள் பறிமுதல்; 15 பேர் கைது

புகையிலை பொருட்கள் விற்ற 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் புறநகர் பகுதியில் ஜீயபுரம், வாத்தலை, நவல்பட்டு, துவாக்குடி, சமயபுரம், கொள்ளிடம், சிறுகனூர், துறையூர், உப்பிலியபுரம், தொட்டியம், தா.பேட்டை, காட்டுப்புத்தூர், துவரங்குறிச்சி உள்ளிட்ட போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பெட்டிக்கடைகளில் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்ததோடு, இதுதொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டு, அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





