மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்; வாலிபர் கைது

மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்; வாலிபர் கைது செய்யப்பட்டார்.
அன்னவாசல்:
இலுப்பூர் அருகே உள்ள கோங்குடிப்பட்டி பகுதியில் மணல் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இலுப்பூர் போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மணல் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்து டிராக்டர் உரிமையாளர் பெரியசூரியூரை சேர்ந்த சுப்பிரமணி மகன் மணிகண்டன் (வயது 30) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





