மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிக்கு வீரர்கள் தேர்வு

மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
13 வயதிற்குட்பட்ட மாணவ-மாணவிகளுக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள் விருதுநகரில் அடுத்த மாதம் 16-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், டிரிப்ளிங், பிரி த்ரோ, லேயப்போட்டி, ஜெர்மன் ரிளே உள்ளிட்ட பயிற்சிகளில் சிறந்து விளங்கிய 24 மாணவ- மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை அரியலூர் மாவட்ட கூடைப்பந்து விளையாட்டு கழகத்தின் தலைவர் பூமிநாதன், செயலாளர் சாமுவேல், பொருளாளர் தினேஷ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





