சுயஉதவிக்குழு உற்பத்தி பொருட்கள் விற்பனை மைய தொடக்கவிழா


சுயஉதவிக்குழு உற்பத்தி பொருட்கள் விற்பனை மைய தொடக்கவிழா
x

பொரசக்குறிச்சி ஊராட்சியில் சுயஉதவிக்குழு உற்பத்தி பொருட்கள் விற்பனை மைய தொடக்கவிழா மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திறந்து வைத்தார்

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்

தியாகதுருகம் அருகே உள்ள பொரசக்குறிச்சி ஊராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்பு வாயிலாக இயற்கை வேளாண்மைக்கான உயிர் உரங்கள் தயாரிப்பு, கால்நடைகளுக்கான பாரம்பரிய மூலிகை மருந்துகள் உற்பத்தி மற்றும் சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்கள் விற்பனை மையம் தொடக்கவிழா நடைபெற்றது. இதற்கு தியாகதுருகம் ஒன்றியக்குழு தலைவர் தாமோதரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் நெடுஞ்செழியன், கவுன்சிலர் பிச்சையம்மாள், மகளிர் திட்ட உதவி அலுவலர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொரசக்குறிச்சி ஊராட்சி தலைவர் லட்சுமி வீராசாமி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள் கலந்துகொண்டு சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு மரக்கன்றுகள், விதைகள் வழங்கினார். தொடர்ந்து சுய உதவிக்குழு உற்பத்திப்பொருட்கள் விற்பனை மையத்தையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கனங்கூர் ஊராட்சி தலைவர் சசிகலா தங்கதுரை, தி.மு.க. நிர்வாகிகள், சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர்.

முடிவில் மகளிர் திட்ட உதவி அலுவலர் நாராயணசாமி நன்றி கூறினார்.


Next Story