ஒரேநாளில் 2,500 நெல் மூட்டைகள் விற்பனை

கலவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரேநாளில் 2,500 நெல் மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. கலவை பகுதியை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைவித்த நெல்லை அறுவடை செய்து கலவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
அதன்படி ஒரே நாளில் 2,500 மூட்டைகள் விற்பனையானது. இதில் கோ-51 ரக நெல் 75 கிலோ மூட்டை ரூ.1,275 முதல் ரூ.1,379 வரை விற்பனையானது. ஏ.டி.டி. 37 ரகம் (குண்டு) ரூ.1,469 முதல் ரூ.1,553 வரை விற்பனையானது. மகேந்திரா ரக நெல் ரூ.1,409 முதல் ரூ.1,646 வரை விற்பனை ஆனது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





