ரூ.12½ லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை

நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று 34¾ டன் காய்கறி மற்றும் பழங்கள் ரூ.12½ லட்சத்துக்கு விற்பனையானது.
உழவர்சந்தை
நாமக்கல் - கோட்டை சாலையில் உழவர்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளைவிக்கப்பட்ட காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்து வருகின்றனர். வார இறுதி நாட்களில் இங்கு காய்கறி விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும். இன்று (திங்கட்கிழமை) என்பதால் நேற்று இதர வாரங்களை காட்டிலும் விற்பனை சுறுசுறுப்பாக இருந்தது.
அந்த வகையில் நேற்று 24¾ டன் காய்கறிகள் மற்றும் 10 டன் பழங்கள் என மொத்தம் 34¾ டன் விற்பனைக்கு வந்தன. இவை ரூ.12 லட்சத்து 41ஆயிரத்து 20 -க்கு விற்பனை செய்யப்பட்டன. இவற்றை 6,910 பேர் வாங்கி சென்றனர்.
விலை விவரம்
நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று தக்காளி கிலோ ரூ.20-க்கும், கத்தரிக்காய் கிலோ ரூ.30-க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ.28-க்கும், புடலங்காய் கிலோ ரூ.28-க்கும், பீர்க்கன் கிலோ ரூ.60-க்கும், பீட்ரூட் கிலோ ரூ.40-க்கும், கேரட் கிலோ ரூ.40-க்கும், பீன்ஸ் கிலோ ரூ.80-க்கும், முட்டைக்கோஸ் கிலோ ரூ.18-க்கும், இஞ்சி கிலோ ரூ.130-க்கும் விற்பனை செய்யப்பட்டன. சின்னவெங்காயம் கிலோ ரூ.70-க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.48-க்கும் விற்பனை செய்யப்பட்டன.
கடந்த வாரத்தை ஒப்பிடும் போது காய்கறிகளின் வரத்து அதிகரித்தும், அவற்றின் விலை சற்றே குறைந்தும் காணப்பட்டது. கடந்த வாரம் கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்ட கத்தரிக்காய் நேற்று கிலோவுக்கு ரூ.10 குறைந்து கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.






