அழகப்பா பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கம்
அழகப்பா பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கம்
சிவகங்கை
காரைக்குடி
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் ஆங்கிலம் மற்றும் அயல் மொழிகள் துறை, தமிழ்த்துறை சார்பில் மகாகவி பாரதியாரும், இந்திய சுதந்திர போராட்டத்தில் அவரது பங்களிப்பும் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை தலைவர் பொன்மதன் வரவேற்றார். அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி தலைமை தாங்கி பேசினார். இதை தொடர்ந்து அழகப்பா பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் ராசாராம், அழகப்பா அரசு கலைக்கல்லூரி முன்னாள் ஆங்கிலத்துறை பேராசிரியர் மாணிக்கம், முன்னாள் தமிழ்த்துறை பேராசிரியர் கண்ணாத்தாள் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கருத்தரங்கில் பல்கலைக்கழக முதுகலை மாணவர்கள் ஆராய்ச்சி மாணவர்கள், பேராசிரியர்கள், இணைப்பு கல்லூரி மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஆங்கிலத்துறை உதவி பேராசிரியை கனிமொழி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story