அரசு பள்ளிக்கு சீர்வரிசை பொருட்கள்


அரசு பள்ளிக்கு சீர்வரிசை பொருட்கள்
x

அரசு பள்ளிக்கு பொதுமக்கள் சீர்வரிசை பொருட்கள் கொடுத்தனர்.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

கூமாபட்டி அரசு தொடக்கப்பள்ளிக்கு தேவையான பொருட்களை கிராம மக்கள் பேரணியாக கொண்டு சென்று பள்ளியில் உள்ள ஆசிரியர்களிடம் கல்விச்சீராக வழங்கினர். பள்ளி நுழைவு வாயிலில் காத்திருந்த ஆசிரியர்கள் கல்விச்சீர் கொண்டு வந்த கிராம மக்களை ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.



Next Story