காட்டுப்பன்றிக்கு அமைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி பலி


காட்டுப்பன்றிக்கு அமைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி பலி
x
தினத்தந்தி 15 Oct 2023 12:15 AM IST (Updated: 15 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

காட்டுப்பன்றிக்கு அமைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி உயிரிழந்தார்.

சிவகங்கை

திருப்புவனம்,

மின்வேலியில் சிக்கி பலி

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பழையனூரை அடுத்த சொக்கநாதிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் குமார்(வயது 39). விவசாயி.

இவர் தனது வயலில் நாற்றங்கால் அமைத்து உள்ளார். நேற்று முன்தினம் இரவு சாப்பாடு எடுத்துக்கொண்டு நாற்றங்காலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார்.

அப்போது மர்ம நபர்கள் சிலர் காட்டுப்பன்றியை பிடிக்க மின்வேலி அமைத்திருந்ததாக கூறப்படுகிறது. எதிர்பாராதவிதமாக அவ்வழியாக சென்ற குமார் மின்வேலியில் சிக்கினார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

போலீசார் விசாரணை

இதை அந்த வழியாக சென்றவர்கள் கவனித்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பழையனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் மணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்புவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

திருட்டுத்தனமாக மின்வேலி அமைத்தவர்கள் யார்? என்பது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, தேடிவருகின்றனர்.

1 More update

Next Story