மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு


மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு
x
தினத்தந்தி 21 March 2023 12:30 AM IST (Updated: 21 March 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் அருகே வீட்டு முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்

கொடைக்கானல் அருகே பூண்டி ஊராட்சிக்குட்பட்ட போளூர் கிராமத்தை சேர்ந்தவர் யுவராஜ் பாண்டி. விவசாயி. நேற்று முன்தினம் இரவு இவர், தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு தூங்க சென்றார். பின்னர் காலையில் எழுந்து வந்தபோது மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்து கிடப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கொடைக்கானல் போலீசில் யுவராஜ் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாண்டியன் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகிறார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Related Tags :
Next Story