பிரதான 5-வது மதகின் ரோப் துண்டிப்பு


பிரதான 5-வது மதகின் ரோப் துண்டிப்பு
x

ஓசூர் கெலவரப்பள்ளி அணையின் பிரதான 5-வது மதகின் ரோப் துண்டிக்கப்பட்டது

கிருஷ்ணகிரி

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணை உள்ளது. 7 மதகுகளை கொண்ட இந்த அணையில், ஒவ்வொரு மதகுகளை திறந்து மூடுவதற்கு இருபுறமும் 2 ரோப்கள் (இரும்பு கயிறுகள்) தாங்கி பிடிக்கின்றன. பிரதான 5-வது மதகின் 2 இரும்புக்கயிறுகளில் ஒன்று துண்டானது. இதனால் கடந்த 3 நாட்களாக அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் தண்ணீர் வேகமாக குறைந்து வருவதால், அனைத்து மதகுகளை சரி செய்ய பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 5-வது பிரதான மதகு ரோப், துண்டானதால் தற்போது அந்த மதகு செயல்படுத்த முடியாத வகையில் இருந்து வருகிறது. மேலும், அணையில் நீர் குறைந்து ஏரி போன்று காட்சியளிக்கிறது.


Next Story