சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது செய்யப்பட்டார்.
நாகர்கோவில்:
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது செய்யப்பட்டார்.
ஈத்தாமொழியை சேர்ந்தவர் கணபதி (வயது 76). இவர் சம்பவத்தன்று 8 வயதுடைய ஒரு சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து வந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் பதறிபோன சிறுமி அங்கிருந்து தப்பி ஓடி தனது பெற்றோரிடம் கூறினார். சிறுமியின் பெற்றோர் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கணபதியை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





