மாணவியிடம் பாலியல் சீண்டல்: கல்லூரி மாணவருக்கு போலீஸ் வலைவீச்சு


மாணவியிடம் பாலியல் சீண்டல்: கல்லூரி மாணவருக்கு போலீஸ் வலைவீச்சு
x

மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கல்லூரி மாணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர்

பண்ருட்டி,

பண்ருட்டி அருகே உள்ள சிறுவத்தூர் திடீர் குப்பத்தை சேர்ந்தவர் சந்துரு(வயது 19). தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வரும் இவர் 17 வயது மாணவியை பாலியல் சீண்டல் செய்ததோடு, அவரை தனக்கு திருமணம் செய்து கொடுக்குமாறு மாணவியின் பெற்றோரை வற்புறுத்தியதாக தெரிகிறது. ஆனால் இதற்கு மறுத்த மாணவியின் பெற்றோர் சந்துருவை கண்டித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த சந்துரு அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசார் சந்துரு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story