இளையான்குடியில் லாட்டரி சீட்டு விற்ற கடை உரிமையாளர் கைது...!


இளையான்குடியில் லாட்டரி சீட்டு விற்ற கடை உரிமையாளர் கைது...!
x

இளையான்குடியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

இளையான்குடி,

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டேஸ்வரர் மற்றும் போலீசார் இளையான்குடி பஜார் பகுதியில் ரோந்து சென்ற போது அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டை விற்பனை செய்ததாக ஜமாலுதீன்(வயது 48) என்பவரை கைது செய்தனர்.

அப்போது அவரிடம் இருந்து ரூ.700 மற்றும் செல்போன், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து போலீசார், அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story