விழுப்புரம் மாவட்டத்தில் இறால் வளர்ப்பு, மீன் உற்பத்தியை அதிகப்படுத்த மீனவர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்


விழுப்புரம் மாவட்டத்தில்  இறால் வளர்ப்பு, மீன் உற்பத்தியை அதிகப்படுத்த மீனவர்கள் விண்ணப்பிக்கலாம்  கலெக்டர் தகவல்
x

விழுப்புரம் மாவட்டத்தில் இறால் வளர்ப்பு, மீன் உற்பத்தியை அதிகப்படுத்த மீனவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மீன்உற்பத்தி

விழுப்புரம் மாவட்டத்தில் உவர்நீர் இறால் வளர்ப்பு மற்றும் மீன் உற்பத்தியை அதிகப்படுத்தவும், மீன் வளர்ப்போரை ஊக்குவித்திடும் விதமாகவும் தமிழக அரசினால் பின்வரும் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.


பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் உயிர்கூழ்மதிரள் (பயோபிளாக்) குளங்களில் இறால் வளர்த்தல் மற்றும் உள்ளீட்டுக்கு மானியம் வழங்குதல் திட்டம், உவர்நீர் இறால் வளர்ப்பிற்காக புதிய குளங்கள் அமைத்தல் மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட உவர்நீர் இறால் வளர்ப்பு குளங்களுக்கு உள்ளீடுகள் வழங்குதல், இத்திட்டத்தில் ஒரு அலகு உயிர்கூழ்மதிரள் குளம் அமைக்க மற்றும் உள்ளீட்டுக்கு ஆகும் மொத்த செலவினம் ரூ.18 லட்சத்தில் பொதுப்பிரிவினருக்கு 40 சதவீத மானியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கலாம்

உவர்நீர் இறால் வளர்ப்பிற்காக புதிய குளங்கள் அமைத்தல் மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட உவர்நீர் இறால் வளர்ப்பு குளங்களுக்கு உள்ளீடுகள் வழங்குதல் திட்டத்தில் உவர்நீர் இறால் வளர்ப்பிற்காக புதிய குளங்கள் கட்டுவதற்கு ஒரு ஹெக்டேர் அலகிற்கு ரூ.8 லட்சம் மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட உவர்நீர் இறால் வளர்ப்பு குளங்களுக்கு உள்ளீடுகள் வழங்க ரூ.6 லட்சத்தில் பொதுப்பிரிவினருக்கு 40 சதவீத மானியம் வழங்கப்படும்.

எனவே இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள், விழுப்புரம் வழுதரெட்டி நித்தியானந்தா நகரில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04146-259329 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story