திருவெண்காடு, பொறையாறு பகுதியில் மின் நிறுத்தம்


திருவெண்காடு, பொறையாறு பகுதியில் மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 4 July 2023 7:30 PM GMT (Updated: 4 July 2023 7:31 PM GMT)

திருவெண்காடு, பொறையாறு பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மயிலாடுதுறை

திருவெண்காடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் திருவெண்காடு, மேலையூர், மணிக்கிராமம், பூம்புகார், பெருந்தோட்டம், நாங்கூர், திருநகரி, வானகிரி, திருவாலி, ராதாநல்லூர், தென்னாம்பட்டினம், மேலச்சாலை, மங்கைமடம், அண்ணன் பெருமாள் கோவில் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கு நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என சீர்காழி மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் லதா மகேஸ்வரி தெரிவித்தார்.பொறையாறு துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படும், பொறையாறு, தரங்கம்பாடி, சந்திரபாடி, திருக்கடையூர், பிள்ளைபெருமாநல்லூர், திருமெய்ஞானம், சங்கரன்பந்தல், குட்டியாண்டியூர், பெருமாள் பேட்டை, வெள்ளைக்கோவில், புதுப்பேட்டை, தாழம்பேட்டை, மாணிக்கப்பங்கு, என்.என்.சாவடி, கண்ணப்பமூலை, அனந்தமங்கலம், காழியப்பநல்லூர், திருக்களாச்சேரி, ஆயப்பாடி, காட்டுச்சேரி, மாங்குடி, தில்லையாடி, திருவிடைக்கழி, எடுத்துக்கட்டி சாத்தனூர், கண்ணங்குடி, கிள்ளியூர், டி.மணல்மேடு, மாத்தூர், ஆகிய பகுதிகளுக்கும் கிடாரங்கொண்டான் ்துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் கிடாரங்கொண்டான், செம்பனார்கோவில், மேலப்பாதி, கஞ்சா நகரம், நத்தம், கீழையூர், கருவாழக்கரை, காலகஸ்திநாதபுரம், திருச்சம்பள்ளி, ஆக்கூர், ஆக்கூர் கூட்டுரோடு, மடப்புரம், மாமாகுடி, சின்னங்குடி, சின்னமேடு, பூந்தாழை, தலைச்சங்காடு, கருவி, செம்பதனிருப்பு மற்றும் சுற்று வட்டார கிராமங்களுக்கும் அதனை சார்ந்த கிராமங்களுக்கும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது என செம்பனார்கோவில் மின் உதவி செயற்பொறியாளர், அப்துல்வகாப் மரைக்காயர் தெரிவித்துள்ளார்.


Next Story