நாமக்கல் மாவட்டத்தில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்


நாமக்கல்  மாவட்டத்தில்  நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
x

நாமக்கல் மாவட்டத்தில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலைப்பட்டி, முள்ளுக்குறிச்சி

நாமக்கல் துணை மின்நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாமக்கல், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிப்பட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிப்பட்டி, தூசூர், முதலைப்பட்டி, போதுப்பட்டி, என்.ஜி.ஓ. காலனி, வீசாணம், சின்ன முதலைப்பட்டி பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

ராசிபுரம் தாலுகா மெட்டாலா துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மெட்டாலா, பிலிப்பாகுட்டை, கணவாய்பட்டி, கப்பலூத்து, ராஜாபாளையம், உடையார்பாளையம், கார்கூடல்பட்டி, உரம்பு, ஆயில்பட்டி, காட்டூர், காமராஜ் நகர், மலையாளப்பட்டி, முள்ளுக்குறிச்சி, பெரியகோம்பை, பெரப்பஞ்சோலை, பெரியகுறிச்சி, மூலக்குறிச்சி, ஊனாந்தாங்கல், கரியாம்பட்டி, வரகூர் கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

பருத்திபள்ளி, எலச்சிபாளையம்

திருச்செங்கோடு கோட்டத்திற்குட்பட்ட பருத்திப்பள்ளி துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வையப்பமலை, கருங்கல்பட்டி, மொரங்கம், நாகர்பாளையம், மின்னாம்பள்ளி, குப்பிச்சிபாளையம், சின்னமணலி, நல்லாம்பாளையம், கட்டிப்பாளையம் சோமனம்பட்டி, பருத்திபள்ளி, ராமாபுரம், அவினாசிபட்டி, பிள்ளாநத்தம், சீத்தக்காடு, மோர்பாளையம், வட்டூர், ஆனங்கூராம்பாளையம், செம்மங்குட்டை, காங்கேயம் பாளையம், கொன்னையார், எலச்சிபாளையம் பிகேபாளையம், அத்திமரப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இந்த தகவல்களை செயற்பொறியாளர்கள் சபாநாயகம், (பொறுப்பு) ரவி, முருகன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


Next Story