நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்


நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
x
தினத்தந்தி 19 Nov 2022 6:45 PM GMT (Updated: 19 Nov 2022 6:47 PM GMT)

நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

நாமக்கல்

குமாரபாளையம்:

நாமக்கல் மாவட்டம் ஆனங்கூர் துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தோக்கவாடி, வரப்பாளையம், கே.எஸ்.ஆர். கல்வி நகர், தச்சங்காட்டு பாளையம், காடச்சநல்லூர், குப்புச்சிபாளையம், வேலாத்தா கோவில், டி.ஜி.பாளையம், பள்ளி கவுண்டம்பாளையம், ஆனங்கூர், பழையபாளையம், புளியம்பட்டியம் பாளையம், ஆண்டிகாடு உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதேபோல் குமாரபாளையம் அருகே சமயசங்கிலி துணை மின்நிலையத்திலும் நாளை மறுநாள் பராமரிப்பு பணிக் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சமயசங்கிலி, சீராம்பாளையம், செங்குட்டைபாளையம், குப்பாண்டபாளையம், குள்ளநாய்க்கன்பாளையம், களியனூர், கோட்டைமேடு, எம்.ஜி.ஆர். நகர், சில்லாங்காடு, ஆவத்திப்பாளையம், பள்ளிபாளையம் அக்ரஹாரம், ஒட்டமெத்தை மற்றும் ஈரோடு மாவட்டம் பிராமண பெரிய அக்ரஹாரம், சத்தி ரோடு அக்ரஹாரம், பவானி மெயின் ரோடு, காமராஜ் நகர், சுண்ணாம்பு ஓடை, நெறிக்கல்மேடு, தாசில்தார் தோட்டம், 16 ரோடு, அதியமான் நகர், செங்கோட்டையன் நகர், வைரம்பாளையம், வாட்டர் ஆபீஸ் ரோடு ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இந்த தகவல்களை பள்ளிபாளையம் மின்வாரிய செயற்பொறியாளர் கோபால் தெரிவித்துள்ளார்.


Next Story