கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்


கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்
x

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

திருவள்ளூர்

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் இந்திய அணுமின் கழகம் நிர்வகிக்கும் சென்னை அணுமின் நிலையம் மற்றும் இந்திரா காந்தி அணுஆராய்ச்சி மையம் போன்றவை இயங்கி வருகிறது. இந்த நிலையில் அணுமின் நிலையத்தில் தொழில்நுட்ப பழுது பராமரிப்பு காரணமாக 2-வது அலகில் மின் உற்பத்தி 45 நாட்களுக்கு நிறுத்தப்படுகிறது. மின் உற்பத்திக்காக 2 அலகுகளில் தலா 220 மெகாவாட் மின்திறனில் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில், முதல் அலகின் வினைகலன் பழுதடைந்து தற்போது வரை இயங்காமல் முடங்கி உள்ளது. 2-வது அலகு மட்டுமே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் பழுது பராமரிப்பு பணி காரணமாக 45 நாட்களுக்கு 2-வது அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்படுவதாகவும், பராமரிப்பு பணி முடிந்தவுடன் வழக்கம்போல் 2-வது அலகில் மின் உற்பத்தி 1½ மாதங்களுக்கு பிறகு தொடங்கும் என்றும் கல்பாக்கம் அணுமின் நிலையம் தெரிவித்துள்ளது.


Next Story