ஓசூரில் மதுபோதையில் தகராறு; வாலிபருக்கு அரிவாள் வெட்டு 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு


ஓசூரில்  மதுபோதையில் தகராறு; வாலிபருக்கு அரிவாள் வெட்டு  3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
x

ஓசூரில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூரில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அரிவாள் வெட்டு

ஓசூர் சுண்ணாம்புத்தெருவை சேர்ந்தவர் ஆஞ்சி. இவரது மகன் சந்தோஷ் (வயது 22) கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு, ராயக்கோட்டை ஹட்கோ பகுதியில் 3 பேருடன் அமர்ந்து மது அருந்தினார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் சந்தோசை ஆபாச வார்த்தைகளால் திட்டி, அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில், அவரது தலை, கைகளில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி விழுந்ததால் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

போலீசார் விசாரணை

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story