மூங்கில்துறைப்பட்டு அருகே போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்ய முயற்சி சார் பதிவாளர் அலுவலகம் முற்றுகை


மூங்கில்துறைப்பட்டு அருகே  போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்ய முயற்சி  சார் பதிவாளர் அலுவலகம் முற்றுகை
x

மூங்கில்துறைப்பட்டு அருகே போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்ய முயற்சி செய்ததை கண்டித்து சார் பதிவாளர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி


மூங்கில்துறைப்பட்டு,

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள வடகீரனூரில் ஒருவருக்கு சொந்தமான நிலத்தை, வேறொருவர் தனது பெயரில் பத்திரப்பதிவு செய்வதற்காக வட பொன்பரப்பி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது அவர் சில போலியான ஆவணங்களை தயார் செய்து எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதுபற்றி நிலத்தின் உரிமையாளருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் தனது ஆதரவாளர்களுடன் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றார். ஆனால் அதற்குள் அந்த நபர் அங்கிருந்து தலைமறைவாகி விட்டார்.

இதுகுறித்து நிலத்தின் உரிமையாளர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டார். உடன் அங்கிருந்த அதிகாரிகள், இது தொடாபாக போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவியுங்கள் என்று தெரிவித்தனா. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


Next Story