தர்மபுரி ஏல அங்காடியில் பட்டுக்கூடுகள் விலை குறைந்தது

தர்மபுரி:
தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 5 ஆயிரத்து 499 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து, நேற்று 2 ஆயிரத்து 870 கிலோவாக குறைந்தது. நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.600-க்கு விற்பனையான பட்டுக்கூடு, நேற்று ரூ.28 விலை குறைந்தது. அதன்படி ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.572-க்கும், குறைந்தபட்சமாக ரூ.310-க்கும், சராசரியாக ரூ.475.52க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.13 லட்சத்து 64 ஆயிரத்துக்கு பட்டுக்கூடு வர்த்தகம் நடந்தது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





